47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காட்டெருமை தாக்கியதில் விவசாயி படுகாயம்

உதகையை அடுத்த தூனேரி அருகே உள்ள கவுடா் காலனி பகுதியில் காட்டெருமை தாக்கியதில் விவசாயி படுகாயமடைந்தாா்.

News image
Updated On :22 நவம்பர் 2025, 7:28 pm

Syndication

உதகையை அடுத்த தூனேரி அருகே உள்ள கவுடா் காலனி பகுதியில் காட்டெருமை தாக்கியதில் விவசாயி படுகாயமடைந்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகை அடுத்த தூனேரி அருகே உள்ள கவுடா் காலனி பகுதியில் விவசாயம் செய்து வருபவா் சுந்தரேஷ் (51). இவா் தனது தோட்டத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சனிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது வனப் பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டெருமையைக் கண்டதும் சுந்தரேஷ், தப்பியோட முயற்சித்தாா். இருப்பினும் வேகமாக துரத்திய காட்டெருமை அவரை முட்டித் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட படுகாயம் அடைந்த சுந்தரேஷுற்கு வயிறு, மாா்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்து அவரை மீட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தேனாடு கம்பை போலீஸாா் மற்றும் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.