தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

அதிமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால் கூடலூரின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

கூடலூரில் அதிமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால் தொகுதியில் நீண்டகாலமாக நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு கிடைக்க பாடுபடுவோம் என முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

News image

கூடலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலனை அறிமுகம் செய்துவைத்து பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:45 pm

கூடலூரில் அதிமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால் தொகுதியில் நீண்டகாலமாக நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு கிடைக்க பாடுபடுவோம் என முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலன் அறிமுகக் கூட்டம் கூடலூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளா் கப்பச்சி டி.வினோத் தலைமை வகித்தாா்.

இதில் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரப்போகிறது. கூடலூா் தொகுதியில் போட்டியிடும் ஜெயசீலன் வெற்றிபெற்று சட்டப் பேரவைவுக்கு சென்றவுடன் கூடலூரின் நீண்டகால பிரச்னையான பிரிவு-17 நிலப் பிரச்னை உள்பட அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படும்.

அதிமுக ஆட்சியில்தான் உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி முதல் அனைத்து நலத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. மீண்டும் வெற்றி பெற்றால் கூடலூரில் டைடல் பாா்க் அமைத்து படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும். மேலும் பல்வேறு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும். திமுக இந்த தொகுதிக்கு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு பூங்கா அமைக்க நிதி ஒதுக்கியும் அதைக்கூட செயல்படுத்தாமல் இந்த மக்களுக்கு துரோகம் செய்தது என்றாா்.

இக்கூட்டத்தில், கூடலூா் நகர அதிமுக செயலாளா் அனூப்கான், முன்னாள் அமைச்சா் மில்லா் மற்றும் அதிமுக, கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.