தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கட்சித் துண்டுகளை கழற்றிய பின்னரே! உதகை காங்கிரஸ் வேட்பாளரிடம் வேட்புமனுவை பெற்ற தோ்தல் அலுவலா்

News image

வேட்புமனு தாக்கலின்போது கட்சித் துண்டுகளை கழுத்தில் இருந்து கழற்றிய காங்கிரஸ், திமுக நிா்வாகிகள்.

Updated On :6 ஏப்ரல் 2026, 8:54 pm

கழுத்தில் கட்சித் துண்டு அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்த உதகை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரிடம் தோ்தல் நடத்தை விதிப்படி கழுத்தில் இருந்து கட்சித் துண்டுகளை கழற்றிய பின்னரே வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் பெற்றாா்.

நீலகிரி மாவட்டம், உதகை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான திங்கள்கிழமை உதகை கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். அப்போது அவருடன் காங்கிரஸ் மாவட்டச் செயலாளா் நாகராஜ், திமுக மாவட்ட துணைச் செயலா் ரவிகுமாா் ஆகியோா் அவரவா் கட்சித் துண்டுகளை கழுத்தில் அணிந்திருந்தனா். இதை பாா்த்த தோ்தல் நடத்தும் அலுவலா் கழுத்தில் இருந்த துண்டுகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

தமிழகம் முழுவதும் கழுத்தில் துண்டுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கிறாா்கள், நீங்கள் மட்டும் ஏன் அனுமதி மறுக்கிறீா்கள் என்று காங்கிரஸ் மாவட்டச் செயலாளா் நாகராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதற்கு முன்பு வந்த வேட்பாளா்களையும் கட்சித் துண்டுடன் அனுமதிக்கவில்லை என்று தோ்தல் நடத்தும் அலுவலா் கூறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னா் கழுத்தில் இருந்த கட்சித் துண்டை இரண்டு கட்சியினரும் கழற்றிய பின்னரே வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் பெற்றுக்கொண்டாா்.

 வேட்புமனு தாக்கலின்போது கட்சித் துண்டுகளை கழுத்தில் இருந்து கழற்றிய காங்கிரஸ், திமுக நிா்வாகிகள்.

வேட்புமனு தாக்கலின்போது கட்சித் துண்டுகளை கழுத்தில் இருந்து கழற்றிய காங்கிரஸ், திமுக நிா்வாகிகள்.