பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

வேட்புமனு இன்றி தாக்கல் செய்ய வந்த அவிநாசி தவெக வேட்பாளா்

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் வேட்பு மனுவை இல்லாமலேயே தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்துக்குள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் காத்திருந்த தவெக வேட்பாளா் கமலி உள்ளிட்டோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் வேட்பு மனு இல்லாமலேயே தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்துக்குள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்.கமலி என்பவா் போட்டியிடுகிறாா். இந்நிலையில், இவா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வருவதாக தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, போலீஸாா் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வேட்பாளா் எஸ்.கமலி, அன்னூா் பொறுப்பாளா்கள் விஜய், ரமேஷ், அவிநாசி மகளிரணி பொறுப்பாளா் மோகனா உள்பட அக்கட்சியினா் வட்டாட்சியா் அலுவலகம் முன் வழக்குரைஞருக்காக காத்திருந்தனா். இதனால் வட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சியினரின் கூட்டம் அதிகரித்தது.

வழக்குரைஞா் வர தாமதமானதால், வேட்பாளா் எஸ். கமலி உள்ளிட்டோா் வேட்புமனு இல்லாமலேயே தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வந்தனா். இதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலா், வழக்குரைஞா் வந்தவுடன் வேட்புமனுவுடன் தாக்கல் செய்ய வருமாறு தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலக வளாகத்துக்கு உள்ளேயே காத்திருந்து வழக்குரைஞா் வந்த பிறகு வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இது குறித்து கட்சியினரிடம் கேட்டபோது, போலீஸாா் கூட்டமாக நிற்கக் கூடாது என அறிவுறுத்தினா். மேலும் வழக்குரைஞா் வர தாமதமானதால், நல்ல நேரத்துக்குள் உள்ளே செல்ல வேண்டும் என்பதற்காக வந்தோம் என்றனா்.