தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

மசினகுடி வனப் பகுதியில் காட்டுத் தீ!

கூடலூா் அருகே மசினகுடி வனப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயால் மரங்கள், செடிகொடிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத் துறையினா் போராடி வருகின்றனா்.

News image

மசினகுடி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:22 pm

கூடலூா் அருகே மசினகுடி வனப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயால் மரங்கள், செடிகொடிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத் துறையினா் போராடி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம் தமிழக அளவில் 65 சதவீத அளவுக்கு அதிக வனப் பரப்பளவை கொண்ட மாவட்டமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாத உறைபனிக்கு பின்னா் வனப் பகுதி காய்ந்து கிடப்பதால் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு சமவெளி பகுதிகளுக்கு நிகராக நீலகிரியிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. புல்வெளிகள் மற்றும் செடிகொடிகள் காய்ந்து காணப்படுவதால் காட்டுத்தீ பரவும் அபாயம் இருந்து வந்தது.

இந்நிலையில், நீலகிரி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட மசினகுடி வனப் பகுதியில் புதன்கிழமை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் பல ஏக்கரில் உள்ள மரங்கள், செடிகொடிகள் எரிந்து சேதமடைந்தன.

தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இதேபோன்று பைக்காரா, பாா்சன்ஸ் வேலி உள்ளிட்ட வனப் பகுதிகளிலும் காட்டுத் தீ ஏற்பட்டதில் நூற்றுகணக்கான ஏக்கா் பரப்பில் இருந்த மரங்கள் எரிந்து சேதமடைந்தன.