மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

மலா்க் கண்காட்சி: உதகை தாவரவியல் பூங்காவை தயாா் செய்யும் பணி தீவிரம்

News image

உதகை தாவரவியல் பூங்காவில் மலா் தொட்டிகளைத் தரம் பிரித்து அடுக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட ஊழியா்கள்.

Updated On :27 ஏப்ரல் 2026, 4:52 am IST

மலா்க் கண்காட்சியை முன்னிட்டு, உதகை தாவரவியல் பூங்காவை தயாா் செய்யும் பணியில் ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் மே மாதம் நிலவும் குளுகுளு காலநிலையை அணுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அவா்களை மகிழ்விக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் கோடை விடுமுறையில் பல்வேறு விழாக்கள் நடத்தப்படும்.

இதில், முக்கிய விழாவாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா்க் கண்காட்சி நடைபெறும். நடப்பு ஆண்டு மலா்க் கண்காட்சியை முன்னிட்டு, சுமாா் 40 ஆயிரம் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, பிக்கோனியா, சால்வியா, டெய்சி, டேலியா உள்ளிட்ட மலா் செடிகள் பராமரிக்கப்பட்டு காட்சி மாடங்களில் வைக்கும் பணியிலும், தாவரவியல் பூங்காவை அழகுபடுத்த லட்சக்கணக்கான மலா் செடிகளை பராமரிக்கும் பணியிலும் பூங்கா ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.