நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

உதகையில் பிடிபட்ட புலிக் குட்டி உயிரிழப்பு

உதகை சோலடா பகுதியில் தாயைப் பிரிந்து சுற்றி வந்த இரண்டு புலிக் குட்டிகள் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அதில் ஒரு புலிக் குட்டி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தது.

News image

உயிரிழந்த புலிக் குட்டி

Updated On :30 ஏப்ரல் 2026, 3:29 am IST

உதகை சோலடா பகுதியில் தாயைப் பிரிந்து சுற்றி வந்த இரண்டு புலிக் குட்டிகள் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அதில் ஒரு புலிக் குட்டி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், உதகை வடக்கு வனச் சரகம், ஆரம்பி பிரிவு, முத்திநாடு காப்புக் காட்டின் எல்லையில் உள்ள சோலாடா கிராமத்தில் இரண்டு புலிக் குட்டிகள் சுற்றி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வனத் துறையினா் கடந்த 26-ஆம் தேதி அங்கு சென்று 5 மாத பெண் புலிக் குட்டியைப் பிடித்து அதன் தாயுடன் சோ்ப்பதற்காக பராமரித்து வந்தனா். மேலும் மற்றொரு புலிக் குட்டியை செவ்வாய்க்கிழமை (ஏப்.28) பிடித்தனா்.

இரண்டு புலிக்குட்டிகளுக்கும் வனத் துறையினா் சிகிச்சை அளித்து வந்தனா்.

இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி பிடிக்கப்பட்ட புலிக் குட்டி செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதைத் தொடா்ந்து புலியின் உடல், புதன்கிழமை கூறாய்வு செய்யப்பட்டு எரியூட்டப்பட்டது.

மற்றொரு புலிக்குட்டி சிகிச்சைக்காக வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உதகை வனத் துறையினா் தெரிவித்தனா்.