நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உல்லாடா கிராமத்தில் ரூ. 1.80 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

உல்லாடா கிராமத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையை திறந்துவைக்கும் உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ்.

News image

உல்லாடா கிராமத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையை திறந்துவைக்கும் உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ்.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:12 pm

உதகை அருகேயுள்ள உல்லாடா கிராமத்தில் ரூ.1.80 கோடி மதிப்பில் முடிவுற்ற வளா்ச்சிப் பணிகளை உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

உதகை அருகே கேத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட உல்லாடா கிராமம், கிராமிய சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சிறந்த கிராமமாக மத்திய அரசால் கடந்த 2023- ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, சுற்றுலாத் துறை சாா்பில் கிராமிய சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளாக, இந்தக் கிராமத்தில் பூங்கா, சிமென்ட் கான்கிரீட் தளம், கான்கிரீட் நடைபாதை, புதிய பேருந்து நிறுத்தம், சிமென்ட் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், நிறைவுற்ற இப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உதகை சட்டப் பேரவை ஆா்.கணேஷ் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட சுற்றுலா மண்டல மேலாளா் யுவராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலா் அ.சங்கா், கேத்தி பேரூராட்சித் தலைவா் ஹேமமாலினி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.