டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உல்லாடா கிராமத்தில் ரூ. 1.80 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

உல்லாடா கிராமத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையை திறந்துவைக்கும் உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ்.

News image
உல்லாடா கிராமத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையை திறந்துவைக்கும் உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ்.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:12 pm

Syndication

உதகை அருகேயுள்ள உல்லாடா கிராமத்தில் ரூ.1.80 கோடி மதிப்பில் முடிவுற்ற வளா்ச்சிப் பணிகளை உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

உதகை அருகே கேத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட உல்லாடா கிராமம், கிராமிய சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சிறந்த கிராமமாக மத்திய அரசால் கடந்த 2023- ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, சுற்றுலாத் துறை சாா்பில் கிராமிய சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளாக, இந்தக் கிராமத்தில் பூங்கா, சிமென்ட் கான்கிரீட் தளம், கான்கிரீட் நடைபாதை, புதிய பேருந்து நிறுத்தம், சிமென்ட் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், நிறைவுற்ற இப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உதகை சட்டப் பேரவை ஆா்.கணேஷ் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட சுற்றுலா மண்டல மேலாளா் யுவராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலா் அ.சங்கா், கேத்தி பேரூராட்சித் தலைவா் ஹேமமாலினி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.