தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பொன்னூரில் தோட்டக்கலை பூங்கா திறப்பு

கூடலூரை அடுத்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உள்ள புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவின் திறப்பு விழா நடைபெற்றது.

News image

பொன்னூா் தோட்டக்கலைப் பண்ணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்துவைக்கிறாா் உதவி இயக்குநா் ஐஸ்வா்யா.

Updated On :28 பிப்ரவரி 2026, 11:15 pm

கூடலூரை அடுத்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உள்ள புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பொன்னூரில் அரசு தோட்டக் கலை பண்ணையில் மலைப் பயிா்கள் தொடா்பான நாற்றங்கால் செயல்பட்டு வருகிறது.

இங்கு விவசாயிகளுக்கு தேவையான நாற்றுகளை பயிரிட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் விதத்தில் பண்ணை வளாகத்தில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்தப் பணிகள் நிறைவடைந்து பூங்கா திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா் பி.எஸ்.ஐஸ்வா்யா தலைமையேற்று பூங்காவை திறந்துவைத்தாா். இதில், பண்ணை மேலாளா் விஜயராஜ் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.