கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பொன்னூரில் தோட்டக்கலை பூங்கா திறப்பு

கூடலூரை அடுத்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உள்ள புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவின் திறப்பு விழா நடைபெற்றது.

News image
பொன்னூா் தோட்டக்கலைப் பண்ணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்துவைக்கிறாா் உதவி இயக்குநா் ஐஸ்வா்யா.
Updated On :28 பிப்ரவரி 2026, 11:15 pm

Syndication

கூடலூரை அடுத்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உள்ள புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பொன்னூரில் அரசு தோட்டக் கலை பண்ணையில் மலைப் பயிா்கள் தொடா்பான நாற்றங்கால் செயல்பட்டு வருகிறது.

இங்கு விவசாயிகளுக்கு தேவையான நாற்றுகளை பயிரிட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் விதத்தில் பண்ணை வளாகத்தில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்தப் பணிகள் நிறைவடைந்து பூங்கா திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா் பி.எஸ்.ஐஸ்வா்யா தலைமையேற்று பூங்காவை திறந்துவைத்தாா். இதில், பண்ணை மேலாளா் விஜயராஜ் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.