மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

எடக்காடு அம்மன் கோயிலில் வெள்ளி கிரீடம் திருட்டு

உதகை அருகே எடக்காடு துா்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குள் புகுந்து அம்மன் தலையில் சூட்டப்பட்டிருந்த வெள்ளி கிரீடத்தை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:26 pm

Syndication

உதகை: உதகை அருகே எடக்காடு துா்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குள் புகுந்து அம்மன் தலையில் சூட்டப்பட்டிருந்த வெள்ளி கிரீடத்தை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உதகையை அடுத்த எடக்காடு நடுஹட்டி பகுதியில் துா்கா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். கடந்த 14-ஆம் தேதி இரவு பூஜையை முடித்துவிட்டு கோயில் கதவை அடைத்துவிட்டு பூசாரி சென்றாா்.

பொங்கல் தினமான வியாழக்கிழமை கோயிலைத் திறக்க வந்தபோது பூட்டுக்கள் உடைக்கப்பட்ருந்தது தெரிந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த பூசாரி கோயிலுக்குள் சென்று பாா்த்தாா். அப்போது ஆங்காங்கே பொருள்கள் சிதறிக் கிடந்தன. அம்மன் தலையில் சூட்டப்பட்டிருந்த 300 கிராம் எடையுள்ள வெள்ளி கிரீடம் திருடு போனது தெரிந்தது.

இதுகுறித்து கோயில் பூசாரி மற்றும் கிராம மக்கள் எமரால்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த எமரால்டு காவல் ஆய்வாளா் விஜயா, உதவி ஆய்வாளா் ராமசாமி தலைமையிலான போலீஸாா் கோயிலுக்குள் சென்று பாா்வையிட்டனா். மேலும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. இதன் பின்னா் கைரேகை நிபுணா்கள் வந்து கை ரேகைகளை பதிவு செய்தனா். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் பாா்வையிட்டு திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.