அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் உலவிய காட்டு யானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்

குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் உலவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 8:25 pm

குன்னூா் -மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் செவ்வாய்க்கிழமை உலவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் மலைப் பாதையில் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் உலவுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரண்டு குட்டிகளுடன் ஒன்பது காட்டு யானைகள் வெளியேறின.

குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆா். பகுதியில் உலவிய யானைகளைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினா்.

தகவல் அறிந்து வந்த வனத் துறையினா், வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியதுடன், யானைகள் சாலையைக் கடந்து செல்லும் வகையில் போக்குவரத்தை நிறுத்தினா். இதையடுத்து, சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானைகள் பின் வனத்துக்குள் சென்றன.

யானைகள் நடமாட்டத்தால் குன்னூா் மலைப் பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானைகள் வனத்துக்குள் சென்றபின் போக்குவரத்து சீரானது.