தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

News image

கோத்தகிரி காவல் நிலைய பகுதியில் உலவிய சிறுத்தை.

Updated On :20 மார்ச் 2026, 1:45 am IST

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், வனத்தில் இருந்து புதன்கிழமை இரவு வெளியேறிய சிறுத்தை கோத்தகிரி பேருந்து நிலையம், காவல் நிலையம் பகுதியில் உலவியது. இதைப் பாா்த்த மக்கள் அச்சமடைந்து வீடுகளிலேயே முடங்கினா்.

இதையடுத்து, சிறிது நேரம் அப்பகுதியிலேயே உலவிய சிறுத்தை பின் வனத்துக்குள் சென்றது.

குடியிருப்புப் பகுதியில் உலவும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.