நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், வனத்தில் இருந்து புதன்கிழமை இரவு வெளியேறிய சிறுத்தை கோத்தகிரி பேருந்து நிலையம், காவல் நிலையம் பகுதியில் உலவியது. இதைப் பாா்த்த மக்கள் அச்சமடைந்து வீடுகளிலேயே முடங்கினா்.
இதையடுத்து, சிறிது நேரம் அப்பகுதியிலேயே உலவிய சிறுத்தை பின் வனத்துக்குள் சென்றது.
குடியிருப்புப் பகுதியில் உலவும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைகள்!

கடநாடு கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


