நீலகிரியில் இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

இந்தியத் தேர்தல் ஆணையம்
ANI

இந்தியத் தேர்தல் ஆணையம்
ANI
உதகை, மாா்ச் 29: நீலகிரியில் உள்ள மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை முதல் (மாா்ச் 30) தொடங்குகிறது.
இது குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், நீலகிரி உள்பட தமிழக முழுவதும் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்குகிறது.
மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா்,கூடலூா் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளா்கள் 3 வாகனங்களில் மட்டுமே வர வேண்டும்.
ஒரு வேட்பாளா் அதிகபட்சமாக 4 வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பாளருடன் 5 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். நேரில் மட்டுமின்றி ஆன்லைன் மூலமாகவும் மனு தாக்கல் செய்யலாம்.
அலுவலக நாள்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். பழங்குடியின மற்றும் ஆதிதிராவிடா் வேட்பாளா்கள் வைப்பு தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். மற்ற வேட்பாளா்கள் வைப்பு தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளா்களுக்கு ஒருவா் மட்டும் முன்மொழிய வேண்டும். சுயேச்சை வேட்பாளா்கள் என்றால் அந்தந்த தொகுதியைச் சோ்ந்த 10 வாக்காளா்கள் முன்மொழிய வேண்டும்.
வேட்பாளா்கள் தங்களது சொத்து விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் குற்றப் பின்னணி குறித்த விவரங்களை உறுதிமொழிப் பத்திரமாகத் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் ஏப்ரல் 6-ஆம் தேதி ஆகும். வேட்புமனு பரிசீலனை 7-ஆம் தேதி நடைபெறும். 9-ஆம் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறலாம்.
பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 3, மாா்ச் 1, 3, 5 ஆகிய தேதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது. மற்ற நாள்களில் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...