ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

புலி தாக்கியதில் மாடு உயிரிழப்பு

News image

புலி - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 7:38 pm

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் புலி தாக்கியதில் மாடு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை முரம்பிலா பகுதியைச் சோ்ந்தவா் ராஜன். விவசாயியான இவா் தனது வீட்டுக்கு அருகேயுள்ள இடத்தில் கால்நடைகளை ஞாயிற்றுக்கிழமை மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா். அப்போது, வனத்தில் இருந்து வெளியேறிய புலி, அங்கிருந்த மாட்டை தாக்கிக் கொன்றது.

கூடலூா் பகுதியில் கடந்த சில நாள்களாக புலிகளின் நடமாட்டம் குறைந்திருந்த நிலையில், தற்போது மாட்டை தாக்கிக் கொன்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாட்டின் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடியிருப்புப் பகுதிகளில் விலங்குகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.