திருத்துறைப்பூண்டியில் மகன் பாட்டிலால் தாக்கியதில் தந்தை உயிரிழந்தாா்.
திருத்துறைப்பூண்டி காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் கரிகாலன் (48). இவரது 17 வயது மகன், தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.
இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக தந்தை-மகனுக்கிடையே ஏற்கெனவே தகராறு இருந்து வந்ததாம். திங்கள்கிழமை இரவு இருவருக்குமிடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த மகன், தந்தையை பாட்டிலால் தாக்கினாராம்.
இதில் பலத்த காயமடைந்த கரிகாலன், சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கரிகாலன் மகனை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தஞ்சையில் உள்ள சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து தந்தை, மகன் உயிரிழப்பு

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

காசோலை மோடி வழக்கு: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


