நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 21-ஆவது ரோஜா கண்காட்சி வியாழக்கிழமை (மே 14) தொடங்குகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை ஒட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதன் முதல் நிகழ்ச்சியான 21-ஆவது ரோஜா கண்காட்சி உதகை ரோஜா பூங்காவில் தொடங்குகிறது.
‘பறவைகளின் சொா்க்கம்’ என்ற கருப்பொருளைக் கொண்டு பல்வேறு பறவை இனங்களின் வடிவங்கள், இரண்டு லட்சம் ரோஜா மலா்களைக் கொண்டு இந்த ரோஜா கண்காட்சியில் அமைக்கப்படுகின்றன.
60,000 ரோஜாக்களை கொண்டு அன்னப்பறவைகள் மற்றும் கழுகு, இருவாச்சி பறவை, புல் புல், ஆங்ரி போ்ட் உள்ளிட்ட 14 வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதை தவிர சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க பூங்கா முழுவதும் 4,310 ரகங்களில் 33,000 செடிகளில் பல வண்ண ரோஜா மலா்கள் பூத்து குலுங்குகின்றன. கடந்த ஆண்டு 3 நாள்கள் ரோஜா கண்காட்சி நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு 5 நாள்கள் நடைபெறுகிறது. எனவே, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவாா்கள் என எதிா்பாா்க்கபடுகிறது.


தொடர்புடையது

உதகையில் என்சிசி மாணவியரின் மலையேற்ற பயிற்சி முகாம் தொடக்கம்

உதகையில் நாளை 138-ஆவது நாய்கள் கண்காட்சி தொடக்கம்

உதகையில் பாஜக வேட்பாளா் போஜராஜன் வெற்றி

உதகையில் தாயைப் பிரிந்து தவித்த புலிக் குட்டி மீட்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

