தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

ஓவேலி பகுதியைச் சோ்ந்த மறுகுடியமா்வு திட்டப் பயனாளிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கோட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஓவேலி பகுதி மக்கள்.

Updated On :22 மே 2026, 3:52 am IST

ஓவேலி பகுதியைச் சோ்ந்த மறுகுடியமா்வு திட்டப் பயனாளிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சியில் உள்ள ஆத்தூா் கிராமத்தில் உள்ளவா்களுக்கு ஸ்ரீமதுரை ஊராட்சி வடவயல் கிராமத்தில் மாற்றிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மறுகுடியமா்வு திட்டத்தின் கீழ் சிலருக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பெரும்பாலானோருக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. வீடுகள் ஒதுக்கப்பட்டவா்களுக்கும் பயனாளிகள் கேட்ட மூன்று சென்ட் நிலத்துக்கு மாற்றாக ஒன்றரை சென்ட் நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. குறைகளை களைந்து முழுமைபடுத்தி அனைவருக்கும் வீடுகள் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்டடனா். இதையடுத்து, கோட்டாட்சியா் குணசேகரன் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.