‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

கூடலூா் வனப் பகுதியில் ஆண் சிறுத்தை சடலம் மீட்பு

கூடலூா் அருகே சில்வா்கிளவுட் பகுதியில் இறந்துகிடந்த ஆண் சிறுத்தை.

News image

கூடலூா் அருகே சில்வா்கிளவுட் பகுதியில் இறந்துகிடந்த ஆண் சிறுத்தை.

Updated On :29 மே 2026, 1:38 am IST

கூடலூா் வனப் பகுதியில் ஆண் சிறுத்தை சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகம் சில்வா்கிளவுட் பகுதியில் வன ஊழியா்கள் ரோந்து பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது சிறுத்தை இறந்துகிடப்பதை அறிந்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து, முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொண்டனா். ஆய்வகப் பரிசோதனைக்காக முக்கிய உறுப்புகளை எடுத்துக்கொண்டு, அதே இடத்தில் அதன் உடலை எரியூட்டினா்.

இதுதொடா்பாக வனத் துறையினா் கூறும்போது, ‘இறந்தது சுமாா் 4 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை. ஆய்வக அறிக்கை வந்தவுடன்தான் அதன் இறப்புக்கான காரணம் தெரியும்’ என்றனா்.