சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

நூல் விலை உயர்வு: பனியன் சங்கங்கள் ஆலோசனை

நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடைத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக திங்கள்கிழமை(மே 13) நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களும் பங்கேற்குமாறு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்க(டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் அழைப்பு விடுத்துள்ளார்.

Updated On :12 மே 2013, 6:36 am IST

நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடைத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக திங்கள்கிழமை(மே 13) நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களும் பங்கேற்குமாறு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்க(டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் அழைப்பு விடுத்துள்ளார்.

 இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நூல் உற்பத்தியாளர்களிடம் நூல் விலையை நிர்ணயம் செய்யக் கோரியும், நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் விவாதிக்க ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இந்த ஆலோசனைக் கூட்டம் பி.என்.சாலை சாந்தி திரையரங்கம் அருகில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

 இதில், அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.