சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மது பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு சென்றவர் கைது

அவிநாசி அருகே டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 10:31 pm

DIN

அவிநாசி அருகே டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
மாவட்ட  மதுவிலக்கு ஏடிஎஸ்பி குணசேகரன் உத்தரவின்பேரில்,  அவிநாசி மதுவிலக்கு போலீஸார்,  அவிநாசி -கோவை  சாலை,  நாதம்பாளையம் பிரிவில் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அவ்வழியாக வந்த காரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இதில், காருக்குள் அதிக அளவில்  மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. 
விசாரணையில்,  காரை ஓட்டி வந்தவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் விநாயகமூர்த்தி (33) என்பதும்,  இவர் வெளியூரிலிருந்து டாஸ்மார்க் மது பாட்டில்களை வாங்கி வந்து,  இருப்பு வைத்து,  கருமத்தம்பட்டியில் தான் நடத்திவரும் உணவகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விநாயகமூர்த்தியைக் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து கார்,  434 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.