அரசுப் பள்ளி ஆசிரியையிடம் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெருந்துறைச் சேர்ந்த ராமநாதன் மனைவி உமாமகேஸ்வரி (45). இவர், சேவூர் அருகே உள்ள செம்மாம்பாளையம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் பள்ளி முடிந்து சேவூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அவர், அணுகுமடை பிள்ளையார் கோயில் அருகே வந்தபோது தலைக்கவசம் அணிந்து, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உமாமகேஸ்வரியிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து, சேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








