திமுக சார்பில் வியாழக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்புப் போராட்டத்துக்கு உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்லமுத்து புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்துக்கு உழவர் உழைப்பாளர் கட்சி முழு ஆதரவைத் தெரிவிப்பதுடன், போராட்டத்திலும் பங்கேற்கும் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








