வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

9 கிராமங்களில் நாளை வருவாய் திட்ட முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வருவாய் கிராமங்களில் "மக்களைத் தேடி வருவாய்த் திட்ட முகாம்' பிப்ரவரி 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:12 am

DIN

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வருவாய் கிராமங்களில் "மக்களைத் தேடி வருவாய்த் திட்ட முகாம்' பிப்ரவரி 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
திருப்பூர் வடக்கு தாலுகா- மண்ணரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், திருப்பூர் தெற்கு தாலுகா -இடுவாய் சின்னம்மன் திருமண மண்டபம், அவிநாசி தாலுகா-ஆலத்தூர் இ-சேவை மையம்,  ஊத்துக்குளி தாலுகா- வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகம், பல்லடம் தாலுகா- கணபதிபாளையம் தொடங்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகம், தாராபுரம் தாலுகா- நந்தவனம்பாளையம் இ-சேவை மையம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
அதேபோல,  காங்கயம் தாலுகா- பழைய கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகம், உடுமலை தாலுகா- பெரிய வாளவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகம், மடத்துக்குளம் தாலுகா- தாந்தோணி ஊராட்சி வளாக இ-சேவை மையம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாம்களில் அந்தந்த கிராம மக்கள், தங்களது கோரிக்கைகளை மனுவாகத் தெரிவித்து தீர்வு பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.