உடுமலை அருகே ரேக்ளா போட்டி
உடுமலை அருகே பள்ளபாளையம் கிராமத்தில் ரேக்ளா போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


உடுமலை அருகே பள்ளபாளையம் கிராமத்தில் ரேக்ளா போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ரேக்ளா போட்டிகளைத் தொடக்கிவைத்தார். இதில், மாவட்டம்
முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. 200 மீ., 300 மீ., என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் பங்கேற்று காளைகள் சீறிப்பாய்ந்து செல்வதை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள், கோப்பைகள் வழங்கப்ப ட்டன. பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி. மகேந்திரன், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் கே.ஆறுச்சாமி, ஆர்.ஜி.ஜெகநாதன், அதிமுக நிர்வாகிகள் பள்ளபாளையம் போகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...