கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

உடுமலை அருகே ரேக்ளா போட்டி

உடுமலை அருகே பள்ளபாளையம் கிராமத்தில் ரேக்ளா போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:57 am

DIN

உடுமலை அருகே பள்ளபாளையம் கிராமத்தில் ரேக்ளா போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ரேக்ளா போட்டிகளைத் தொடக்கிவைத்தார். இதில்,  மாவட்டம் 
முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. 200 மீ., 300 மீ., என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் பங்கேற்று காளைகள் சீறிப்பாய்ந்து செல்வதை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
  இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள், கோப்பைகள் வழங்கப்ப ட்டன. பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி. மகேந்திரன்,  ஒன்றிய அதிமுக செயலாளர்கள் கே.ஆறுச்சாமி, ஆர்.ஜி.ஜெகநாதன், அதிமுக நிர்வாகிகள் பள்ளபாளையம் போகநாதன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.