எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

உடுமலை அரசுக் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு

உடுமலை அரசு கலைக் கல்லூரியின் புதிய முதல்வராக கு.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Updated On :9 ஜூலை 2018, 1:59 am

உடுமலை அரசு கலைக் கல்லூரியின் புதிய முதல்வராக கு.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வந்த கு.பாலகிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று  உடுமலை அரசு கலைக் கல்லூரியின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 உடுமலை அரசு கலைக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வந்த க.சித்ரா கோவை அரசுக் கல்லூரி முதல்வராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற கு.பாலகிருஷ்ணனுக்கு கல்லூரி ஆட்சிக் குழுவினர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.  கு.பாலகிருஷ்ணன் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியராக கடந்த முப்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 
இரண்டாம் நிலைக் கல்லூரியான குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்த நிலையில் பதவி உயர்வு பெற்று முதல்நிலைக் கல்லூரியான உடுமலை அரசு கலைக் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.