தாராபுரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
தாராபுரம், கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (80). இவர் நடைப் பயிற்சி மேற்கொள்வதற்காக தாராபுரம் புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் சின்னசாமி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இது குறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








