வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ரூ.9.28 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  ரூ.9.28 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏல விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2018, 1:36 am

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  ரூ.9.28 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏல விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் புதன்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுகிறது. இந்த வார ஏலத்துக்கு,  மொத்தம்  9,278 கிலோ தேங்காய் பருப்பு வரத்து இருந்தது.  அதிகபட்ச விலையாக கிலோ ரூ.127.85-க்கும்,  குறைந்தபட்சம் ரூ. 48.75-க்கும் ஏலம் போனது. 
ஏலத்தில், கரூர்,  மூலனூர்,  திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 30 விவசாயிகளும், காங்கயம், கொடுமுடி, முத்தூர் பகுதியிலிருந்து 9 வணிகர்களும் பங்கேற்றனர். 
விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.9.28 லட்சம் விவசாயிகளுக்கு மின்னணு பரிவர்த்தனை மூலம் பட்டுவாடா செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.