ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெள்ளக்கோவில் உள்வட்ட பகுதிகளில் மே 29, 30இல் வருவாய்த் தீர்வாயம்

வெள்ளக்கோவில் உள்வட்டப் பகுதிகளுக்கான வருவாய்த் தீர்வாயம் மே 29, 30ஆ ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

Updated On :21 மே 2018, 7:07 pm

வெள்ளக்கோவில் உள்வட்டப் பகுதிகளுக்கான வருவாய்த் தீர்வாயம் மே 29, 30ஆ ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இதில் பட்டா மாறுதல், வாரிசுச் சான்றிதழ் உள்ளிட்ட இதர சான்றுகள் தேவைப்படுவோர் பங்கேற்றுப் பயன் பெறலாம்.
அரசு பொது சேவை மையங்களில் முன்கூட்டியே விண்ணப்பித்து அதன் ஒப்புகைச் சீட்டுடன் மனுச் செய்ய வேண்டும்.
மே 29 அன்று உள்வட்டத்தைச் சேர்ந்த முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், மங்கலப்பட்டி, வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம் கிராம மக்களும், மே 30 இல் சேனாபதிபாளையம், வெள்ளக்கோவில், உத்தமபாளையம், லக்கமநாய்க்கன்பட்டி, கம்பளியம்பட்டி, பச்சாபாளையம், வீரசோழபுரம், வள்ளியிரச்சல் கிராம மக்களும் பங்கேற்று இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.