வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு இந்த வாரம் 10 டன் முருங்கைக்காய் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.
வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களில் வாரந்தோறும் முருங்கைக்காய்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் 12 டன் அளவுக்கு வரத்து இருந்தது. இந்த வாரம் வரத்து குறைந்து 10 டன் அளவுக்கு மட்டுமே
முருங்கைக்காய்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதனால், விலை கிலோவுக்கு ரூ.5 அதிகரித்து மர முருங்கைக்காய் கிலோ ரூ. 20க்கும், செடி முருங்கைக்காய் ரூ. 40க்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.
தற்போது, திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் முருங்கைக்காய் தேவை அதிகரித்துள்ளதாகவும், வரும் வாரத்தில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்

தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

