தாராபுரம் நகரக் கூட்டுறவு வங்கிக்கு இயக்குநர்களைத் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இந்த வங்கிக்கு மொத்தம் 11 இயக்குநர்களைத் தேர்வு செய்ய இரண்டு முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதி வேட்பு மனுக்கள் பெறப்பட்டு சனிக்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 8 பேரும், போட்டி அதிமுக சார்பில் 3 பேரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 7 பேரும் என 21 பேர் போட்டியிட்டனர்.
மொத்தம் 7 ஆயிரத்து 8 பேரை வாக்காளர்களாக கொண்ட இந்த வங்கித் தேர்தலில் 1,679 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
வாக்குப் பெட்டிகள் அனைத்தும் காவல் துறையினர் பாதுகாப்புடன் நகரக் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

