திருப்பூரில் அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பிகார் மாநில இளைஞர் உயிரிழந்தார்.
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர், காசிபாளையம் சாலை ஈஸ்வரன் கோயில் அருகே திங்கள்கிழமை இரவு ஒரே இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடை அருகில் இந்த இரு சக்கர வாகனம் மீது திருப்பூரில் இருந்து சிட்கோ நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்ற பிகார் மாநிலத்தைச் சேர்ந்த என்.அனில்குமார் (24) உயிரிழந்தார். அதே மாநிலத்தைச் சேர்ந்த அஜய்பர்வின் (23) காயமடைந்தார்.
இது குறித்து திருப்பூர் ஊரக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தி பிரேம் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்! நேரலை

ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி

அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை!

தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


