தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

உடுமலை அண்ணா குடியிருப்பு பூங்காவைச் சீரமைக்க வலியுறுத்தல்

உடுமலையில் அண்ணா குடியிருப்புப் பகுதியில் உள்ள பூங்காவைச் சீரமைக்க வேண்டும் என எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :23 ஜனவரி 2019, 9:44 am IST

உடுமலையில் அண்ணா குடியிருப்புப் பகுதியில் உள்ள பூங்காவைச் சீரமைக்க வேண்டும் என எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை மக்கள் பேரவை நிர்வாகிகள் கூட்டம் இந்திய மருத்துவச் சங்க கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  தலைவர் யு.கே.பி. முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். தொழிலதிபர் ஜி.ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில், ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்கு கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும். 
உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் கிழபுறம் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலமாக ரவுண்டானா அமைக்க வேண்டும். திருவனந்தபுரம்-மதுரை இடையிலான  அமிர்தா விரைவு ரயில் உடுமலையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா குடியிருப்புப் பகுதியில் உள்ள பூங்காவைச் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  நிர்வாகிகள் வழக்குரைஞர் சோமசுந்தரம், டாக்டர் சிவசண்முகம், சுந்தரராஜன், கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.