உடுமலையில் அண்ணா குடியிருப்புப் பகுதியில் உள்ள பூங்காவைச் சீரமைக்க வேண்டும் என எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை மக்கள் பேரவை நிர்வாகிகள் கூட்டம் இந்திய மருத்துவச் சங்க கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தலைவர் யு.கே.பி. முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். தொழிலதிபர் ஜி.ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில், ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்கு கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் கிழபுறம் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலமாக ரவுண்டானா அமைக்க வேண்டும். திருவனந்தபுரம்-மதுரை இடையிலான அமிர்தா விரைவு ரயில் உடுமலையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா குடியிருப்புப் பகுதியில் உள்ள பூங்காவைச் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் வழக்குரைஞர் சோமசுந்தரம், டாக்டர் சிவசண்முகம், சுந்தரராஜன், கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

தொடரும் பாலியல், கொலை... முதல்வர் ஜோசப் விஜய்யின் வீரவசனம் என்ன ஆனது? - டிடிவி தினகரன் கேள்வி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக் கொலை!

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


