தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :14 டிசம்பர் 2020, 8:47 am

DIN

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிளுக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை முதல் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிவித்திருந்தது. இதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Story image

இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும், விவசாயிகளைப் பாதிக்கும் 3 புதிய வேளாண் திருத்தச் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றனர். இதையடுத்து, அனுமதியின்றி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 150க்கும் மேற்பட்ட விவசாயிகளை திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர். 

இந்த சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.