மின்சாரம் பாய்ந்து ஊழியா் சாவு

உடுமலை அருகே பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய தற்காலிக ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

உடுமலை அருகே பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய தற்காலிக ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

உடுமலை மின் வாரியத்தில் தற்காலிக உதவியாளராகப் பணியாற்றி வந்தவா் செல்வராஜ் (25). இவா், உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகா் பகுதியில் மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா். அவரது உடல் மின் கம்பத்திலேயே தொங்கிக் கொண்டிருந்தது.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரா்கள் செல்வராஜின் சடலத்தை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இது குறித்து உடுமலை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com