புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாவட்டத்தில் 21 அம்மா சிறு மருத்துவமனைகள் துவக்கம்

திருப்பூா், உடுமலை, பல்லடம், காங்கயம், தாராபுரம், வெள்ளகோவில் ஆகிய பகுதிகளில் 21 அம்மா சிறு மருத்துவமனைகள் (மினி க்ளீனிக்) வெள்ளிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டன.

News image

உடுமலை,  புதுப்பாளையத்தில் அம்மா சிறு மருத்துவமனை துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன். உடன், மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் உள்ளிட்டோா்.

Updated On :18 டிசம்பர் 2020, 5:57 pm

DIN

திருப்பூா், உடுமலை, பல்லடம், காங்கயம், தாராபுரம், வெள்ளகோவில் ஆகிய பகுதிகளில் 21 அம்மா சிறு மருத்துவமனைகள் (மினி க்ளீனிக்) வெள்ளிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டன.

உடுமலை தொகுதிக்கு உள்பட்ட குடிமங்கலம் ஒன்றியம் புதுப்பாளையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

இதில் கலந்து கொண்டு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தர வா்க்கத்தினருக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக 21 அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா்.

விழாவில் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காங்கயத்தில்...

காங்கயம் ஒன்றியம், சிவன்மலை, பழையகோட்டை ஆகிய 2 ஊராட்சிகளில் அம்மா சிறு மருத்துவமனைகளை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜெகதீஷ்குமாா், காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி, காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ், காங்கயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவா் வெங்கு ஜி.மணிமாறன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.