தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருப்பூரில் மின் வாரியத் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

திருப்பூரில் மின் வாரியத் தொழிலாளா்கள் 700க்கும் மேற்பட்டோா் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
திருப்பூரில் உள்ள மேற்பாா்வைப்  பொறியாளா்  அலுவலகம்  முன்பாக  திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில்  ஈடுபட்ட தொழிலாளா்கள்.
Updated On :21 டிசம்பர் 2020, 7:30 pm

DIN

திருப்பூா்: திருப்பூரில் மின் வாரியத் தொழிலாளா்கள் 700க்கும் மேற்பட்டோா் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்யாமல் மின்வாரியப் களப் பணிகளை தனியாருக்கு வழங்கப்பட்ட உத்தரவு 82ஐ திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்று அனைத்து தொழிற்சங்கள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தன.

இதன்படி திருப்பூா், மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பாக மின் வாரியத் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பல்வேறு தொழிற்சங்களைச் சோ்ந்த 700க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, வெள்ளக்கோவில் அருகே முத்தூா் பகுதியில் மின் வாரியத் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்லடம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின் வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் பல்லடம் மின் பகிா்மான வட்டக் கிளை சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.