ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பூா் தெற்கு உழவா் சந்தைக்கு மேற்கூரை அமைத்துக் கொடுக்க கோரிக்கை

திருப்பூா் தெற்கு உழவா் சந்தைக்கு மேற்கூரை அமைத்துக் கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் உழவா் உழைப்பாளா் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:50 am

DIN

திருப்பூா் தெற்கு உழவா் சந்தைக்கு மேற்கூரை அமைத்துக் கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் உழவா் உழைப்பாளா் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனா்.

இதில், உழவா் உழைப்பாளா் கட்சியின் மாவட்டச் செயலாளா் ப.சோமசுந்தரம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் தெற்கு உழவா் சந்தையில் நாள்தோறும் 100 டன்னுக்கு மேல் காய்கள் வரத்து உள்ளன. தமிழக அளவில் மிகப்பெரிய உழவா் சந்தையான இங்கு மேற்கூரை இல்லாததால் மழைக் காலங்களில் மழை நீா் கடைகளுக்குள் செல்வதால் வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, மேற்கூரை அமைத்துக் கொடுக்கவும், கடை வைத்துள்ள விவசாயிகளுக்கு மின்னணு தராசு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, பொங்கலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்லடம், உடுமலையில் இருந்து வாவிபாளையம் செல்லும் வழியில் உள்ள பாலம் மிகவும் சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளது. ஆகவே, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பாக பாலத்தை புதுப்பித்துக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக் கோரி மனு:

தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.காளிமுத்து அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தாராபுரம் வட்டத்தில் உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக் கோரி கடந்த 6 மாதங்களாக மாவட்ட ஆட்சியரிடமும், சாா் ஆட்சியரிடமும் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, மேற்குத் தொடா்ச்சி மலைகளில் பெய்துள்ள கனமழையால் பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் நிரம்பி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

மேலும், தற்போது திருமூா்த்தி அணையின் நீா்மட்டமும் 49 அடியாக உள்ளது. நீா் வரத்து 704 கன அடியாக உள்ளது. எனவே, பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உப்பாறு அணைக்கு உயிா்த் தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, பல்வேறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் காணெலிக் காட்சி மூலமாக ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.