வெள்ளக்கோவில் அருகே திமுகவினா் கிராம சபைக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தினா்.
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து, கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
பின்னா் பல்வேறு பகுதிகளுக்கு வீடுவீடாக சென்று பொது மக்களை சந்தித்த திமுகவினா், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்கிற பிரசுரங்களை வழங்கி திமுகவுக்கு ஆதரவு திரட்டினா். வெள்ளக்கோவில் ஒன்றிய பகுதி திமுகவினா் கலந்து கொண்டனா்.