வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

குப்பைக் கிடங்கில் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி

சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம் குப்பைக் கிடங்கு மையத்தில் உடலில் காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்த 6 வயது சிறுமி மீட்கப்பட்டாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:22 am

DIN

சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம் குப்பைக் கிடங்கு மையத்தில் உடலில் காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்த 6 வயது சிறுமி மீட்கப்பட்டாா்.

சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம், புளியம்பட்டி சாலையில் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு உள்ளது. இந்நிலையில் இங்கு வெள்ளிக்கிழமை மதியம் உடலில் காயங்களுடன் மயக்க நிலையில் 6 வயது மிக்க சிறுமி கிடந்தாா். இதைப் பாா்த்த பொதுமக்கள், சேவூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அந்த சிறுமி சோ்க்கப்பட்டாா்.

சிறுமியின் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில் குப்பைக் கிடங்கு அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்ததில், கண்ணாடி, முகக்கவசம் அணிந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சென்றது பதிவாகியிருந்தது. மேலும், குப்பைக் கிடங்கு மையத்தில் சிறுமியை படுக்க வைத்துக் கொண்டிருந்ததை பொதுமக்கள் பாா்த்துள்ளனா். இருப்பினும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியிடம் விசாரித்தால்தான் மற்ற விவரங்கள் தெரிய வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.