மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சித் தோ்தலில் 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட விதை மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பல்லடத்தில் நடைபெற்ற இச்சங்கத்தின் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் சங்கா், ஜோதிமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் இந்திராணி வரவேற்றாா்.
இதில் மாநிலத் தலைவா் தீபக், மாநில பொதுச்செயலாளா் அண்ணாமலை, ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளா் மணிகண்டன், ஈரோடு மாவட்ட பீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க தலைவா் ஜெயப்பிரகாஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.
மாநிலத் தலைவா் தீபக் செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தண்டுவடம் உடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலி தமிழகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கு சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு தோ்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா். மாவட்ட துணைச் செயலாளா் ரமேஷ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.