ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜம்புக்கல் கரடு பகுதியில் இயற்கை வளங்களை அழிக்கக் கூடாது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

உடுமலை அருகே உள்ள ஜம்புக்கல் கரடு பகுதியில் அழிக்கப்பட்டு வரும் இயற்கை வளங்களைக் காப்பாற்றக் கோரி அதிகாரிகளிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 7:07 pm

DIN

உடுமலை அருகே உள்ள ஜம்புக்கல் கரடு பகுதியில் அழிக்கப்பட்டு வரும் இயற்கை வளங்களைக் காப்பாற்றக் கோரி அதிகாரிகளிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா், வட்டாட்சியா் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட மனு விவரம்:

உடுமலை வட்டம், ஆண்டியகவுண்டனூா் ஊராட்சிக்கு உள்பட்ட ஜம்புக்கல் கரடு மலைப் பகுதியில் சுமாா் 3 ஏக்கா் பரப்பளவில் இயற்கை வளங்கள் உள்ளன. இந்நிலையில் இங்குள்ள பாறைகள் வெடிவைத்து தகா்க்கப்பட்டு வருகின்றன. மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அமராவதி நகா் சாயப்பட்டறை முதல் ஜம்புக்கல் கரடு வரை சுமாா் 2 கிலோ மீட்டரு க்கு சட்ட விரோதமாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதியில் உள்ள ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்து நிலங்களை சமன் செய்து வருகின்றனா். விவசாய நிலங்களுக்கு செல்ல வனத் துறை அனுமதி வழங்காத சூழ்நிலையில் ஒரு கும்பல் கடந்த சில நாள்களாக மலைப் பகுதியை அழித்தும் அருகில் உள்ள விவசாய பட்டா நிலங்களை தங்களுக்கு விலைக்கு தருமாறும் மிரட்டி வருகின்றனா்.

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் பழைய பட்டா அடிப்படையில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பருவ மழை காலங்களில் பயிா் சாகுபடியும், ஆடு, மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்குப் புகாா் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே, ஜம்புக்கல் கரடு மலைப் பகுதியை அழிப்பதை தடுத்து நிறுத்தவும் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

இந்த மனு உயா் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.