47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பூர் மண்டலத்தில் 68 நாள்களுக்குப் பிறகு 197 அரசு பேருந்துகள் இயக்கம்

திருப்பூர் போக்குவரத்து மண்டலத்தில் 68 நாள்களுக்குப் பின்னர் 197 அரசு பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன

News image
Updated On :1 ஜூன் 2020, 5:32 am

DIN

திருப்பூர் போக்குவரத்து மண்டலத்தில் 68 நாள்களுக்குப் பின்னர் 197 அரசு பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன. ஆனால் பயணிகள் இல்லாததால் பெரும்பாலான பேருந்துகள் தாமதமாக இயக்கப்பட்டன.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது முடக்கத்தில் தளர்வுகளை ஏற்படுத்தியதன் அடிப்படையில் 50 சதவீத பேருந்துகள் திங்கள்கிழமை இதல் மண்டலங்களுக்குள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. 

இதன்படி திருப்பூர் போக்குவரத்து மண்டலத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளுக்கு என மொத்தம் 197 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகள் அனைத்தும் பணிமனைகளில் கிருமி நாசினியால் சுத்தப்பட்டிருந்தது. மேலும், ஓட்டுநர், நடத்துநர் கையுறை, முகக் கவசம் அணிந்திருந்தனர்.

அதே போல், பேருந்து பயணிகளுக்கும் முகக் கவசம் அணிந்தே பயணித்தனர்.  எனினும் பெரும்பாலான பேருந்துகளில் பயணிகள் கூட்டம் இல்லாததால் தாமதமாகவே சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.