47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

திருப்பூரில் கொடிக்கம்பம் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

News image
Updated On :18 மே 2020, 5:00 am

DIN

திருப்பூரில் கொடிக்கம்பம் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் மாநகரில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் சார்பில் 500க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்கள் உள்ளன. இதில்,பெரும்பாலான மையங்களில் காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் ஒரு சில ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியில் செயல்பட்டு வரும் ஏடிஎம் இயந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடியவே அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், ஏடிஎம் மையம் மற்றும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராப் பதிவைக் கொண்டும் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.