தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உடுமலை அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி

உடுமலை அருகே சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

News image
கோப்புப் படம்.
Updated On :2 நவம்பர் 2020, 3:26 am

DIN

உடுமலை அருகே சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் கள்ளிப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (20). இவரது நண்பர் ருத்ரமூர்த்தி (16). உறவினர் சபரி (9). இவர்கள் மூவரும் இரண்டு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் ஒன்பது மணி அளவில் கோவை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனர். 
அப்போது கள்ளிப்பாளையம் பிரிவு என்ற இடத்தில் பொள்ளாச்சியில் இருந்து வந்து கொண்டிருந்த சரக்கு வேன் இவர்களது இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூவரும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே மூவரும் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.