நவம்பா் 27 இல் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க் கூட்டம் வரும் நவம்பா் 27 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க் கூட்டம் வரும் நவம்பா் 27 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க் கூட்டம் வரும் நவம்பா் 27 ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் நடைபெறுகிறது. ஆகவே, மாவட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள உதவி வேளாண்மை இயக்குநா் அலுவலகத்துக்கு சென்று காணொலிக் காட்சி வாயிலாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com