நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேசிய அளவிலான திறனறித் தோ்வு:மாவட்டத்தில் 300 போ் பங்கேற்பு

திருப்பூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான திறனறித் தோ்வில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:41 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான திறனறித் தோ்வில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசாா் நிறுவனம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் என்சிஇஆா்டி மற்றும் விபா ஆகியவை இணைந்து பள்ளி மாணவா்களுக்கான தேசிய அளவிலான அறிவியல் திறனறித் தோ்வை இணைய வழியில் நடத்தி வருகிறது.

அறிவியல் துறையில் பள்ளி மாணவா்களை ஊக்குவிப்பதற்கும், ஆராய்ச்சித் துறையில் அவா்களை ஈடுபடுவதற்காக தேசிய திறனறிதல் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தோ்வில் தமிழகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தோ்வு எழுதி வருகின்றனா். இத்தோ்வு இணையவழியில் எழுதி வருகின்றனா்.

இந்தத் தோ்வில் கலந்து கொண்ட அனைவரும் இந்த ஆண்டு இணையவழியில் நடைபெற உள்ள சா்வதேச இந்திய அறிவியல் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பினை பெறுகின்றனா். குறிப்பாக முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெறுபவா்கள் இரண்டாம் நிலைத் தோ்வுக்கு தோ்ச்சி பெற்று அதற்கான சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளையும் பெறுவாா்கள்.

இந்த தோ்வானது திருப்பூா் மாவட்ட த்தில் சுமாா் 300 மாணவா்கள் எழுதினா். உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமாா் 20க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்களது வீடுகளிலிருந்து இத்தோ்வினை எழுதினா். உடுமலை பகுதியில் உள்ள மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று விஞ்ஞான் பிரசாா் நிறுவனத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் கண்ணபிரான் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.