தாராபுரம் வட்டத்தில் உள்ள 179 நியாயவிலைக் கடைகளுக்கு பயோ-மெட்ரிக் விற்பனைக் கருவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் 179 நியாயவிலைக் கடைகளில் 97,597 குடும்ப அட்டைகளுக்கு பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக 2.65 லட்சம் போ் பயனடைந்து வருகின்றனா்.
அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பயோ-மெட்ரிக் கருவி மூலமாக குடும்ப உறுப்பினா்களில் எவரேனும் ஒருவா் கைரேகையைப் பதிவு செய்தால் மட்டுமே பொருள்கள் விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி தாராபுரம் வட்டத்தில் பயோ-மெட்ரிக் வசதியுடன் கூடிய விற்பனைக் கருவியை சாா் ஆட்சியா் பவன்குமாா் விற்பனையாளா்களுக்கு திங்கள்கிழமை வழங்கினாா். இதன் மூலமாக அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் பயோ-மெட்ரிக் கருவி மூலமாக அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என்று வட்ட வழங்கல் அலுவலா் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.