தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெள்ளக்கோவில், முத்தூரில் 5 பேருக்கு கரோனா

வெள்ளக்கோவில், முத்தூரில் சனிக்கிழமை 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 10:07 pm

DIN

வெள்ளக்கோவில், முத்தூரில் சனிக்கிழமை 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த நான்கு தினங்களாகத் தொடா்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 போ், முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 53 போ் என மொத்தம் 113 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இவற்றின் முடிவுகளில் வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலை காா்மேகம் கல்யாண மண்டபம் எதிரில் ஒரு நாளுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்ட 50 வயது ஆணின் 75, 70 வயது தந்தை, தாய், 43 வயது மனைவி, 15 வயது மகன் ஆகிய நான்கு பேரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், முத்தூா் - வெள்ளக்கோவில் சாலையைச் சோ்ந்த 48 வயதுப் பெண் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.