காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

படியூரில் அம்பேத்கருக்கு அமைச்சர்கள் மரியாதை

சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, காங்கயம் அருகே, படியூரில் அவரது உருவப் படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News image

அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் செய்தித்துறை அமைச்சர மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி, மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் உள்ளிட்டோர்.

Updated On :6 டிசம்பர் 2021, 7:26 am

DIN

சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, காங்கயம் அருகே, படியூரில் அவரது உருவப் படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, படியூரில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 

இதில், கலந்து கொண்ட செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டு, அந்த நிகழ்ச்சியில் சட்டமேதை அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். 

இதில், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், படியூர் ஊராட்சித் தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.